Friday, April 19, 2024

அதிரை தரகர்தெருவில் நடைபெற்ற சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த ஆலோசனை கூட்டம் !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் தரகர்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் இன்று மதியம் 1.00 மணிக்கு தரகர் தெரு நிர்வாக கமிட்டி, தரகர்தெரு இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு தரகர் தெரு பகுதியில் தினசரி சேரும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பது, நீர் நிலைகளில் குப்பைகள் சேராமல் பராமரிப்பது பற்றி ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்தில் தரகர் தெரு நிர்வாக கமிட்டி தலைவர் ஆப்ரின்.எம். நெய்னாமுஹம்மது , உதவித்தலைவர் G. பசூல்கான் , K.M. நூர்முஹம்மது , S.முகைதீன் , S.A.M. முகைதீன் , ஜலிலா ஜூவல்லர்ஸ் ரஜீஸ்கான், அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் தலைவர் வ. விவேகானந்தம் , துணை செயலாளர் மரைக்கா கே.இதிரிஸ் அஹமது , உறுப்பினர் M.B.அப்துல் ஹாலிம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :

1.அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தினந்தோறும் வீடு, வீடாக வந்து குப்பைகளை பெற தக்க நடவடிக்கை எடுக்க பேரூராட்சி செயல் அலுவலரை சந்திக்க முடிவு செய்யப்பட்டது.

2.குப்பைகள் அதிகம் சேருமிடங்களில் இப்பகுதி குடியிருப்புவாசிகளின் ஒத்துழைப்போடு இரும்பு கம்பி வலை குப்பைக் கூண்டுகள் வைக்கவும், அதனை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் சார்பில் கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

3.ரம்ஜான் பண்டிகை முடிந்தபின்னர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக குப்பைகள் பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

4.பள்ளிவாசல் குளத்தில் சேர்ந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை பேரூராட்சி மற்றும் தன்னார்வ தொண்டர்கள் ஒத்துழைப்புடன் அகற்றவும் , குளக்கரையில் மரக்கன்றுகள் நட்டுபராமரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...