Friday, April 19, 2024

பகையானது புகை ! அதிரை வஜிர் அலியின் வடுக்கள் !!

Share post:

Date:

- Advertisement -

புகையெனும் பகைவன்

எனது வாழ்வில் நடந்த உண்மை சம்பவமிது.

நான் பள்ளிப்பருவத்திலேயே புகைபிடிக்க ஆரம்பித்துவிட்டேன்.

ஆரம்பகாலத்தில் மிகமிக இன்பமாகவும் விலையுயர்ந்த சிகெரெட் GOLD FLAKE & MARLBORO புகைப்பதால் மட்டற்ற மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது.

நாளொன்றுக்கு ஒரு பாக்கெட் MARLBORO (20 சிகெரெட்கள்) மிகச் சாதாரணமாக புகைத்தேன் வீட்டில் அனைவருக்கும் தெரியவந்தும் யாரும் என்னைக் கண்டிக்கவில்லை அவ்வளவு செல்லமாக வளர்ந்தேன்.

காலச்சக்கரம் மிகவேகமாக சுழன்றது நல்ல ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் வாழ்ந்துவந்த எனதன்பு தந்தை நோய்வாய்ப்பட்டார்கள் காரணம் இந்த உயிர்க்கொல்லி சிகெரெட் தான் என்று கண்டறியப்பட்டது மருத்துவ சோதனையில்.

எத்தனை எத்தனையோ மருத்துமனைகளுக்கு அழைத்துச் சென்றோம் யாதொரு பலனுமில்லை எனதன்பு தந்தை அவர்கள் மரணப்படுக்கையில் இருப்பதை நன்குணர்ந்தார்கள் என்னிடம் முதலும் கடைசியுமாக வினவினார்கள் எனதருமை மகனே இந்த உயிர்க்கொல்லி பழக்கமான புகைபிடிப்பதை நிறுத்திவிடு என்றார்கள்.

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதில் உடன்பட்ட நான் அன்றே புகைபிடிப்பதை நிறுத்திவிட்டேன் அன்றிலிருந்து ஒன்பதாவது நாள் எனதன்பு தந்தை இவ்வுலகை விட்டு பிரிந்தார்கள்.

புகைபிடிப்பவர்களுக்கு எனது கனிவான வேண்டுகோள் இந்த புகைபழக்கம் தான் உடலில் உருவாகும் அத்தனை நோய்களுக்கும் காரணமாக விளங்குகிறது புகையெனும் பகைவனை விட்டொழித்து ஆரோக்கியமான வாழ்வை வாழுங்கள்.

ஆக்கம் : வஜிர் அலி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...