Friday, March 29, 2024

மதுக்கூரில் CBD அமைப்பு சார்பில் சிறப்பாக நடைபெற்ற சமூக விழிப்புணர்வு சந்திப்பு-2018 நிகழ்ச்சி..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மதுக்கூரில் CBD(கிரசெண்ட் பிளட் டோனர்ஸ்) அமைப்பின் சார்பில் சமூக விழிப்புணர்வு சந்திப்பு நிகழ்ச்சி-2018 என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மதுக்கூர் CBD அமைப்பின் நகர தலைவர் அகமது முஸ்தபா அவர்கள் தலைமை தாங்க, J. இஜாஸ் அகமது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் “விபதில்லா தேசம் உருவாக்குவோம்” என்ற தலைப்பில் உறவுகள் அமைப்பின் நிறுவனர் காலித் அகமது அவர்களும், “இரத்த தானம்” என்ற தலைப்பில் சமூக ஆர்வலர் மற்றும் CBDஅமைப்பின் மாநில குருதி ஒருங்கிணைப்பாளர் குர்ஷித் ஹுசைன் அவர்களும், “சமூக மேம்பாட்டிற்கு இளைஞர்களின் பங்கு” என்ற தலைப்பில் பேரா. செய்யது அகமது கபீர் அவர்களும், “சுற்றுசூழல் பாதுகாப்போம்” என்ற தலைப்பில் தமிழ் பல்கலைக்கழகத்தின் சுற்றுசூழல் மற்றும் மூலிகை துறை துணை தலைவர் பேரா. சிவசுப்பிரமணியம் அவர்களும் உரையாற்றினார்.

மேலும், இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை பாதுகாப்புடன் செலுத்துவது மற்றும் சில விழிப்புணர்வுகள் குறித்து மதுக்கூர் காவல் ஆய்வாளர் திரு. ஆனந்ததாண்டவம் அவர்களும், இளைஞர்கள் பணி சமூக பணி என்ற குறிப்போடு அர்-ரஹ்மான் தொடக்கப்பள்ளி முன்னாள் தாளாளர், மதுக்கூர் கபார் அவர்களும் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...