Friday, April 19, 2024

தஞ்சையில் திமுக தலைமையில் மனிதசங்கிலி போராட்டம்.,தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்ப்பு..!!

Share post:

Date:

- Advertisement -

 

தமிழக முழுவதும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் மற்றும் மத்திய மாநில அரசைக் கண்டித்து பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகள் சார்பாக போராட்டம் ஆர்ப்பாட்டம் வெடித்து வருகிறது.

இந்நிலையில், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் தோழமை கட்சிகள் ஒன்று இணைந்து மத்திய மாநில அரசை கண்டித்து இன்று(23/04/18) தஞ்சாவூரில் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

இந்த மனித சங்கிலி போராட்டத்தில் மறுமலர்ச்சி திமுக பொது செயலாளர் வைகோ, மனித நேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுஷா, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில துணை தலைவர் அதிரை நசுருதீன், திமுகவை சேர்ந்த பாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதுமட்டுமின்றி, இந்த போராட்டம் தமிழக முழுவதும் திமுக தலைமையில் தோழமை கட்சிகள் இணைந்து இன்று மாலை 4 மணி முதல் 5 மணிவரை மனிதசங்கிலி போராட்டத்தில் கைகளை கோரத்தப்படி அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...