காஷ்மீரில் சிறுமி ஆசிஃபாவை கற்பழித்து கொலை செய்த பயங்கரவாதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் , சிறுமி ஆசிஃபாவிற்கு நீதி வழங்க கோரியும் அதிரை பேருந்து நிலையம் அருகே இன்று(15/04/2018) மாலை சுமார் 4:30 மணியளவில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா அவர்களது தலைமையில் , மாநில செயற்குழு உறுப்பினர் அதிரை செய்யது, மாநில ஊடக பிரிவு செயலாளர் மதுக்கூர் ஃபவாஸ் கான் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமுமுக வின் தலைமை கழக பேச்சாளர் ஊட்டி அபூதாஹிர் கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 70க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக MLAவையும் , RSSயும் எதிர்த்து BJP கொடி எரிக்கப்பட்டது.