தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க கோரியும், மீத்தேன் திட்டத்தை தடை செய்ய கோரியும் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இளைஞர்களாக ஒன்றிணைந்து
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே கலாம் நண்பர்கள் இயக்கம் அதிரை ஒன்றியம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், தூத்துக்குடி ஸ்டெர்லலைட் ஆலையை மூடக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் அதிரை பேருந்து நிலையம் அருகே சுமார் 5மணியளவில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலாம் நண்பர்கள் இயக்கத்தின் அதிரை ஒன்றிய செயலாளர் அலெஸ்ஜாண்டெர் அவர்கள் வரவேற்புரை வழங்க, தஞ்சை மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் கண்டன கோஷங்களை எழுப்பினார்.
இந்தஆர்ப்பாட்டத்தில் வாழ்த்துறையை பட்டுகோட்டை கலாம் இயக்க பொருளாளர் மதுசூதனன் வழங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டுகோட்டை மற்றும் அதிரையை சேர்ந்த இளைஞர்கள் பலர் கலந்துகொண்டு தங்களின் கண்டனத்தை பதிவுசெய்தனர்.
வீடியோ இணைப்பு:-