காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக அதிரை பேருந்து நிலையம் அருகே மமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் அகமது ஹாஜா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மமக தொண்டர்கள் பங்கேற்று கைதாகினர். தற்போது இவர்கள் அனைவரும் சாரா திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.