Thursday, March 28, 2024

பேராவூரணி~பட்டுக்கோட்டை செல்லும் சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறை அலுவரிடன் கோரிக்கை..!!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்:- பேராவூரணியிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் காட்டாற்று பாலத்தில் சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பேராவூரணியிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செல்லும் வழியில் சுமார் 400 மீட்டர் தூரத்திற்கு காட்டாற்று பாலம் உள்ளது. இந்த பாலத்தில் ஆங்காங்கே சிறுசிறு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது எதிரே வருகின்ற வாகனங்களுக்காக ஒதுங்கும்போது பள்ளத்தில் விழுவதும், தவறி பாலத்திற்குள் விழுவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் மக்கள் படுகாயமடைகின்றனர்.போக்குவரத்து அதிகமான இந்த பாதையில் நீண்ட நாட்களாக பாலத்தில் உள்ள பள்ளம் மூடப்படாமல் உள்ளது. பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி உடனடியாக பாலத்தில் உள்ள சிறுசிறு பள்ளங்களை மூட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச்செயலாளர் ஏ.வி.குமாரசாமி, நெடுஞ்சாலை துறை அலுவலர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...