அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கான தேர்தல் நடக்க இருக்கிறது. பார் கவுன்சிலுக்கான தலைவர், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் இந்த தேர்தலின் மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.
இப்போது இருக்கும் பொறுப்பாளர்களின் பதவிக்காலம் முடிவடைவதால் இந்த தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல் மார்ச் 28ல் நடைபெறும் என்று தேர்தல் நிர்வாக குழு அறிவித்துள்ளது.
இதனையொட்டி பார்கவுன்சில் தேர்தலில் எஸ்டிபிஐ கட்சியின் வழக்கறிஞர் அப்பாஸ் அவர்கள் போட்டியிடுகிறார்.அவருக்காக தமிழகத்தின் பல இடங்களில் வழக்கறிஞர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர்.இந்நிலையில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் வழக்கிறஞருமான சி.வி சேகர் அவர்களிடம் ஆதரவு கேட்டு வழக்கறிஞர் அதிரை நிஜாம் அவர்கள் சந்தித்தார்.
இந்த சந்திப்பில் மல்லிப்பட்டிணம் ஹவாஜா மற்றும் இன்ப பிற வழக்கறிஞர்கள் உடனிருந்தனர்.