Friday, April 19, 2024

அதிரைக்கு குர்ஆன் மாநாடு அவசியமா….?

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் இயங்கிவரும் பைத்துல்மால் தொண்டு நிறுவனத்தின் சார்பில் பல்வேறு நலதிட்ட உதவிகளை பொதுமக்களின் பொருளாதார உதவியுடன் செம்மையாக செய்து வருகிறனர்.

இந்நிலையில் பைத்துல்மாலின் சார்பில் குர்ஆன் மாநாடு நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றது.

மேலும் இது பயனற்ற வேலை என்றும், அதிரையில் உள்ள சிலர் வட்டியின் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர் என்றும், அவர்களை முழுமையாக மீட்காமலும், முதியோர், ஏழை மக்களை வதைக்கு உள்ளாக்கும் வருமையில் இருந்து மக்களை விடுவிக்கவும் இந்த மக்கள் இயக்கம் முழுமையான முறையில் பங்காற்ற வேண்டும் என பொது மக்களின் எண்ணமாக உள்ளன.

இது குறித்து பைத்துல்மாலின் குர்ஆன் மாநாட்டு குழுவில் இடம்பெற்றுள்ள ஒருவர் நமது அதிரைஎஎக்ஸ்பிரஸ் நிருபரிடம் கூறியதாவது,

அதிரை பைத்துல்மால் சார்பில் நடத்தும் இக்குர்ஆன் மாநாடு பைத்துல்மாலின் பணியல்ல எனவும் இதற்கு பொது நிருவன நிதியில் இருந்து பணம் எடுப்பது இல்லை என தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர் இதற்கென தனியார்களிடம் இருந்து ஸ்பான்சர்(நன்கொடை) பெற்று நடந்து வருவதால் இது அதிரைக்கு தேவையான ஒன்றாகும் என்றார்…

சமூக ஆர்வலர் ஒருவர் நம்மிடம் கூறுகையில், ஊரில் என்னற்ற பள்ளிவாசல்கள் பராமரிப்பு இன்றி இமாம் முஅத்தீன்களுக்கு ஊதியம் கொடுப்பது மின்கட்டனம் செலுத்துவதே சிரமப்பட்டு வரும் சூழலில் இது போன்ற குர்ஆன் மாநாடு தேவையற்றவை என கூறினார்.

பைத்துல்மாலின் நிர்வாகிகளின் பெரும்பாலானோர் இதனை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ள நிலையில், அவர்களை தவிர்த்து இந்த நிலைப்பாட்டை பைத்துல்மால் நிர்வாகம் எடுத்துள்ளதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...