அதிராம்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க பொது கூட்டம் நடைப்பெற்றது . அதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
கூட்டத்தில், அக்கட்சியின் மாவட்ட இளைஞர் பாசறை இணைச் செயலாளர் ஏ.ஜே ஜியாவுதீன், மாவட்ட இணைச் செயலளார் கரிகாலன், மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் மணி. செந்தில், துரைமுருகன். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் புதுகை தேசிகன், மாநில ஒருங்கிணைப்பாளர் ஹுமாயூன், அய்யம்பேட்டை கிருஷ்ணகுமார் ஆகியோர் பேசினர்.
கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கீதா கருணாநிதி தலைமை வகித்தார். அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் மீ. செகுபர் சாதிக், செயலாளர் சே.சைபுதீன், பொருளாளர் முனாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்ட முடிவில் துணைச் செயலாளர் சிவக்குமார் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.