திருச்சி: திருச்சி அருகே திருவெறும்பூரில் போலீஸார் உதைத்ததில் 3 மாத கர்ப்பிணி உயிரிழந்தார்.
இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜா மற்றும் அவருடைய மனைவி உஷாவை விரட்டி சென்ற போலீஸார் எட்டி உதைத்ததில் 3 மாத கர்ப்பிணியான உஷா வேன் மோதி சம்பவ இடத்திலே உயிர் இழந்தார்.
உயிர் இழக்க காரணமாக போக்குவரத்து காவலர் காமராஜ் தப்பி ஓடினார். அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சாலையை மறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.