Tuesday, April 23, 2024

அதிரை பேரூராட்சியால்  பள்ளி குழந்தைகளின் உயிர்க்கு ஆபத்து..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் பேரூராட்சி நிர்வாகத்தால் பள்ளி குழந்தைகளின் உயிர்களுக்கு ஆபத்து நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிரை வாய்க்கால் தெரு அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கூடம் பின்புறம் செட்டியா குளம் பழமை வாய்ந்த குளங்களில் ஒன்றாகும்.இந்த குளத்தை சீரமைக்க ரூபாய் 50லட்சம் செலவில் தூர்வாரபட்டது.

ஆனால்,இந்த குளத்தில் 50லட்சத்திற்கு என்ன செய்தார்கள் என்ற சந்தேகம் ஒருபக்கம் இருக்க , மறுபக்கம் அந்த குளத்தை சரியான சீரமைப்பு செய்யாததால் அங்கு காடு போல் மரங்கள் மன்றிகிடக்கிறது.இதனால், தொடக்க பள்ளி வளாகம் உள்ளே பாம்பு போன்ற விஷ பிராணிகள் வரத்தொடங்கின.

அதுமட்டுமின்றி, பள்ளியில் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் சத்து உணவு தயாரித்து வழங்கும் இடத்திற்க்கு மிக அருகாமையில் கழிவுநீர் வாய்க்கால் திறந்து கிடப்பதால் அங்கு துர்நாற்றம் வீசுவதுடன் அங்கு குழந்தைககுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கான காரணம் அங்கு பேரூராட்சி நிர்வாகம் சரியான முறையில் கழிவுநீர் வாய்க்கால்களுக்கு மேற் கூரை அமைத்து தராததே ஆகும்.

இதனை தொடர்ந்து, அப்பள்ளியிக்கு தன்னுடைய பிள்ளைகளை அனுப்ப பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர் ஏனெனில், சத்துணவு என்பது பிள்ளைகளுக்கு ஊட்டத்தை கொடுக்கவே தவிர நோயை கொடுக்க அல்ல.

இதனை தொடர்ந்து, அங்கு அந்த வாய்க்கால் சீறமைக்கப்படுமா..??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...