Saturday, April 20, 2024

என்னாது வயிற்றை சுற்றியுள்ள சதையை குறைக்க ’10 மிளகு’ போதுமா…!!!

Share post:

Date:

- Advertisement -

வயிற்றை சுற்றியுள்ள சதையை குறைக்க ’10 மிளகு’ போதும்.

◆”10 மிளகு” செய்யும் அற்புதம்:

’10 மிளகு கையில் இருந்தால், பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம்’ என்று கூறுவர் நம் முன்னோர்கள். நஞ்சை முறித்து உயிரை காக்கும் தன்மை மிளகுக்கு உள்ளது. அதோடு மட்டுமின்றி, உணவில் மணத்தையும், சுவையையும் கூட்டி தருகிறது. நாவில் உள்ள சுவை நரம்பு, உமிழ்நீர் சுரப்பிகளையும் தூண்டுகிறது. இதற்கு “கருப்புத் தங்கம்” என்ற பெயரும் உள்ளது.

◆மிளகின் மருத்துவ குணங்கள்:

●நாம் அனைவரும் அன்றாடம் உணவாக எடுத்துக்கொள்ளும் மிளகு ரசம், மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

●செரிமானத்தைச் சீர் செய்து, குடலைப் பலப்படுத்தக் கூடியது. வாயுத்தொல்லை, அஜுரணம் ஏற்படாமல் தடுக்கிறது.

●மிளகு இலையை மருந்தாக பயன்படுத்தலாம். மிளகு இலையையும், நொச்சி இலையையும் சேர்த்து நீர் விட்டுக் கொதிக்க வைத்து, கால் வீக்கம், வலி, அடிப்பட்ட வீக்கத்துக்கு,இந்த நீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை நீங்கும்.

●மிளகு இலை-இரண்டு, லவங்கம், வெற்றிலை-தலா ஒன்று எடுத்து மைய அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்து, காலை, மாலை என இரு வேலையும் கொடுக்க, விட்டு விட்டு ஏற்படும் காய்ச்சல் தணியும்.

●பெண்களுக்கு ஏற்படும் முறையற்ற மாதவிடாய் கோளாறுகள் நீங்க, ஐந்து மிளகோடு ஒரு கழற்சிக்காய்,தினமும் காலையில் வெறும் வயிற்றில், தொடர்ந்து 48 நாட்கள் உட்கொள்ள வேண்டும்.

இம்மருந்தை ,அதிக ரத்தப்போக்கு உள்ள நாட்களில் தவிர்ப்பது நல்லது.

●வயதானோருக்கு ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் மூலம் தணிய, மிளகுப் பொடி-கால் டீஸ்பூன், சோம்பு, தேன்-தலா ஒரு டீஸ்பூன் சேர்த்து, இரு வேளையும் சாப்பிட்டு வர வேண்டும்.

●உடலில் தேவையற்ற கொழுப்பு நீங்கவும், வயிற்றைச் சுற்றியுள்ள சதை குறையவும், ரத்த ஓட்டம் சீர்பெறவும், தினமும், ஐந்து மிளகோடு இரண்டு வெற்றிலை சேர்த்து நன்றாக மென்று விழுங்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...