அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்டம், அதிரையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
04.03.18.ஞாயிறு அன்று காலை 10 மணியளவில் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகரில் திராவிட முன்னேற்க் கழகத்தின் செயல் வீரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் 65வது பிறந்த நாளை முன்னிட்டு கல்வெட்டு அமைத்து இந்நிகழ்வுக்கு அதிரை பேரூர் கழக செயலாளர் இராம.குணசேகரன் தலைமை ஏற்றார்.
மாவட்ட கலை இலக்கிய. பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் திரு. K.செல்வம் கழக கொடியேற்றினார் .பேரூர் கழக துணைச் செயலாளர் A.M.Y.அன்சர்கான் அங்கு வருகை தந்தவர்களை வரவேற்று உரை நல்கினார் . மாவட்டப் பிரதிநிதி மீராசாபகுருதீன், முல்லை மதி,T.முத்துராமன் EX.M.C.சரீப் நாகூரான்,கண்ணண் கமால்(கோவராசா), ஜமால் ராஜா பிச்சை நைனாமுகம்மது, தம்பு பெரிசாமி அங்குள்ள மக்களுக்கு இனிப்பு வழங்கி இனிமையாக தி.மு.க.வினர் சிறப்பாக கொண்டாடினர்