தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ஆஷிக் அஹமது.இவர் அரபியில் ஹசனி & காசிமி பட்டம் பெற்றவர்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நேற்று (22/02/2018) 34வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பலருக்கு டாக்டர் பட்டம் மற்றும் முனைவர் பட்டம் ஆகியவை அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அதிரையை சேர்ந்த ஆஷிக் அஹமது மௌலானா அவர்களுக்கு குர்ஆன் , ஹதீஸ் மற்றும் விஞ்ஞான பார்வையில் கியாமத் நாளின் அடையாளங்கலும் தற்கால நிகழ்வுகளும் ( இஸ்லாமும் மறுமையும்) என்ற தலைப்பின் பெயரில் அரபுகலை மொழியில் டாக்டர் பட்டம் பெற்றார்.
இவரின் தந்தையார் மர்ஹும் சிபுகத்துல்லாஹ் முன்னாள் ஷிபா மருத்துவமனையின் செயலாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதிரையின் பெயரை சிறப்பாக மாற்றிய இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.