தஞ்சாவூர் மாவட்டம்; அதிரம்பட்டினத்தில் ரோட்டரி சங்கம் பல ஆண்டு காலமாக சிறப்பான முறையில் இயங்கி வருகின்றது.
ரோட்டரி சங்கம் வருடத்திற்கு ஒரு முறை இலவச கண் பரிசோதனை முகாம் அதிரை மக்களுக்கு இலவச சேவை நடத்திவருகிறது.
இன்று (18.02.2018) ஞாயிற்றுகிழமை திருச்சியில் நடைபெற்ற கோவை சங்கரா மருத்துவமனை நடத்திய சங்கமம் நிகழ்ச்சியில் அதிரையில் சிறப்பாக கண் பரிசோதனை முகாம் நடத்திய அதிரை ரோட்டரி சங்கத்திற்கு சிறந்த கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்:-
ரோட்டரி சங்க தலைவர் Rtn.R.ஆறுமுகம்.
செயளாளர் Rtn.T.முகமது நவாஸ் கான்,
பொருளாளர் Z.அகமது மன்சூர்,
மாவட்ட பிரதிநிதி.Rtn.M.வெங்கடேஸ்,
Rtn.MK.சம்சுதீன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.