சென்னை ரெட் ஹில்ஸ் அலாமதி பகுதியில் இன்று(17/02/2018) சனிக்கிழமை காலை முதல் இஸ்லாமியர்கள் இஸ்திமாவை நோக்கி வருகைதர துவங்கினார்கள்.
இந்த சென்னை பகுதியின் இஸ்திமா இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது.
இன்று மட்டும் இஸ்திமாவிற்கு சுமார் 50,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
நாளை இஸ்திமாவின் இறுதி நாளை முன்னிட்டு இறுதியாக சிறப்பு பிராத்தனை செய்யப்படும்.
அந்த பிரார்த்தனைக்கு லட்சக்கணக்கில் மக்கள் வெள்ளம் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.