Friday, April 19, 2024

பட்டுகோட்டை அரசு மருத்துவமனையை கண்டித்து போராட்டம்..!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுக்கோட்டையில் அரசு மருத்துவமனையில் விபத்திற்குள்ளானோர்களை தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அளவிற்கு அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலர் இறந்துவிடும் நிலை நிலவி வருகிறது.

இந்நிலையை போக்கும் வகையில் பட்டுகோட்டை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்று சனிக்கிழமை காலை போராட்டம் நடத்தபோவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து, இன்று காலை பட்டுகோட்டை அரசு மருத்துவமனையின் அருகாமையில் இளைஞர் கூட்டம் கூட ஆரம்பித்தனர்.
அதன் பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்பினால் இளைஞர்கள் அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டன. இதனையடுத்து, பட்டுகோட்டை தலைமை அஞ்சல் அலுவலகம் அருகாமையில் இளைஞர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அதன் பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...