மனிதநேய மக்கள் கட்சியின் பத்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் பேரூர் கழகத்தின் சார்பில் இன்று மதுக்கூர் மார்க்கெட் லைனில் உள்ள மமக அலுவலகத்தில் கொடி ஏற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் சளி வெளியேற்றும் கருவி வழங்கப்பட்டது, மேலும் பிரசவ வார்டில் உள்ளவர்களுக்கு பழங்கள், பிரட் போன்றவற்றும் கொடுக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மமக பேரூர் கழக தலைவர் முஜிபுர் ரஹ்மான், பேரூர் கழக செயலாளர் தாஹா, தமுமுக செயலாளர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் முகமது இலியாஸ், முன்னால் மாவட்ட செயலாளர் கபார், விழி அமைப்பின் செயலாளர் நிசார் அஹமது, மாநில ஊடக பிரிவு துணை செயலாளர் ஃபவாஸ் கான்,பேரூர் கழக துணை செயலாளர் ஃப்ரோஸ் கான், SMI பேரூர் கழக செயலாளர் யூசுப் கான், மருத்துவ அணி செயலாளர் ராசிக் அஹமது, முன்னாள் பேரூர் கழக தலைவர் ஹாஜா மைதீன், முன்னாள் மருத்துவ அணி செயலாளர் ஆம்புலன்ஸ் நசருதீன்,அமீரக பொறுப்பாளர்கள் ராவுத்தர்சா, சிராஜ், சாதிக் பாட்சா,பட்டுக்கோட்டை நகர செயலாளர் சலீம் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்..