Thursday, March 28, 2024

சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் நிர்வாகிகள் மற்றும் தூய்மைத்தூதுவர்கள் அதிரை காவல் நிலையத்தில் புகார்..!!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் பேரூராட்சியில் அதிகமான குப்பைகள் தெருக்களில் இரைந்துகிடந்து வந்தன.

மழைக்காலங்களில் பிளாஸ்டிக்கழிவுகளில் மழைநீர்தேங்கி கொசுக்கள் பெருகி டெங்குகாய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் பரவி அதிரை வாழ்மக்கள் பெரும் துன்பத்துக்குள்ளாயினர்.

பேரூராட்சியின் தூய்மைப்பணிக்கு உதவிசெய்யும் வகையிலும், தூய்மையான அதிரையை உருவாக்கவேண்டும் என்ற நல்லநோக்கத்தோடு அதிரையில் உள்ள தன்னார்வதொண்டு அமைப்புகள் அதிரைபேரூராட்சி பகுதிகளில் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் வாழும் கொடையாளர்களிடம் பல்வேறு சிரமங்களுக்கிடையில் நன்கொடை பெற்று இரும்புகம்பி வலையால் ஆன குப்பைக்கூண்டுகளை வைத்துபராமரித்துவருகின்றனர். தினந்தோறும் காலையில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் அதிரை பேரூராட்சி முழுதும் குப்பைக்கூண்டுகள் மற்றும் குப்பைகளை பார்வையிட்டு வாட்ஸ் ஆப் மூலம் பேரூராட்சிக்கு தகவல் அளித்து வருகின்றனர்.பேரூராட்சி சார்பிலும் தூய்மைப்பணி செய்து வருகின்றனர்.இதனால் தெருக்களில் குப்பைகள் இரைந்துகிடப்பது குறைந்து வருகிறது.

இந்நிலையில் அதிராம்பட்டினம் காட்டுக்குளம் அருகில் ஷம்சுல் இஸ்லாம்சங்கம் மற்றும் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 சார்பில் வைக்கப்பட்டிருந்த 70கிலோ எடையுள்ள இரும்புக்கம்பிவலைக்கூண்டினை நேற்று 26.01.2018 முதல் காணவில்லை.மர்மநபர்களால் திருடப்பட்டுள்ளது.

அதிராம்பட்டினம்சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் முடிவின்படி இன்றுகாலை 11.00மணியளவில் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் நிர்வாகிகள் மற்றும் தூய்மைத்தூதுவர்கள் அதிராம்பட்டினம் காவல்நிலையம் சென்று புகார் அளித்துவந்துள்ளனர்.
காவல்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...