அதிராம்பட்டினம் மெயின்ரோட்டில்(ஹபீபா ஹைப்பர் மால் எதிராக) உள்ள மின்மாற்றியிலிருந்து அப்பகுயில் உள்ள வனிக நிறுவனங்களுக்கு உயரழுத்த கம்பிகள் மூலம் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.
முன்னதாக நன்கு உயரமாக.கட்டப்பட்ட அக்கம்பிகள் தற்போது தொய்வு ஏற்பட்டு தாழவாக தொங்குகின்றன, இதனிடையில் பட்டுக்கோட்டை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் என் ஆர் ரங்கராஜன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மெயின் ரோட்டில் உயமாக சாலை அமைக்கப்பட்டன இதனால் தொய்வாக இருந்த மின் கம்பி அவ்வழியே செல்லும் கனரக வாகனங்களில் உராய்வை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் அவ்வாகனங்களில் மின்சாரம் பாய்ந்து உயிர்ப்பழி ஏற்பட வாய்ப்புகள் அதிகமுள்ளன.
எனவே மின் வாரியம் வரக்கூடிய மின் நிறுத்த நாளில் இப்பிரச்சனையை தீர்க்க வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி வியாபாரிகள் மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.