Saturday, April 20, 2024

ஸ்ரீலங்கா அரசாங்கத்தனால் தேடப்படுபவர், இந்தியாவில் அகதியாக இனங்காணப்பட்டார்!

Share post:

Date:

- Advertisement -

பல்வேறு பண மோசடிகள் காரணமாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தனால் தேடப்பட்டு வரும் நபர், இந்தியாவில் அகதியாக இனங்காணப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய, ஸ்ரீலங்கா அரசாங்கம் சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி இலங்கையிலிருந்து படகில், தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு தயாபரராஜா மற்றும் அவரது மனைவி உதயகலா மூன்று குழந்தைகளுடன் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளனர். இவர்கள் கடவுச்சீட்டு தடை சட்டத்தின் கீழ் இந்திய சிறையில் அடைக்கப்பட்டு, தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வருகின்றனர்.

தற்போது சர்வதேச அரசாங்கத்தின் உதவியுடன் குறித்த அகதிகளை கைது செய்வதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை இந்திய தூதரகம் மூலம் மண்டபம் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...