Friday, March 29, 2024

ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது – தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி !

Share post:

Date:

- Advertisement -

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்க , பசுமைத் தீர்ப்பாயம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, நீண்ட நாள்களாகப் போராட்டம் நடைபெற்றுவந்தது. கடந்த மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற நூறாவது நாள் போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தினால் , போலீஸார் துப்பாகிச் சூடு நடத்தினர். இதில், 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் பின்னர், ‘ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும்’ எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து ஆலையும் மூடப்பட்டது. இந்நிலையில் , ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரியும் தமிழக அரசு அறிவித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும் ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் பசுமைத் தீர்ப்பாயத்தில் கடந்த 3-ம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைப் பசுமைத் தீர்ப்பாயம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. விசாரணையில், தமிழக அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்க பசுமைத் தீர்ப்பாயம் மறுப்புத் தெரிவித்துள்ளது. மேலும் , இதுகுறித்து வரும் 18-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டு , அன்றைய தினத்துக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பசுமைத் தீர்ப்பாயத்தின் முழு விசாரணை நிறைவடைந்து , இறுதித் தீர்ப்பு வரும்வரை ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...