Friday, April 19, 2024

வாஜ்பாய் மறைவு … தமிழகம் உட்பட பல மாநிலங்களில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு !

Share post:

Date:

- Advertisement -

உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று மாலை 5.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் 7 நாட்கள் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அரசின் நிகழ்ச்சிகள் 7 நாட்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

வாஜ்பாயின் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழக அரசும் அறித்துள்ளது. நாளை வெள்ளிக்கிழமை (16-08-2018) தமிழகத்தில் அரசு விடுமுறை என்றும் பள்ளிகள் , கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்றும் தமிழகத்தில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதுச்சேரி , கர்நாடகம் , மத்திய பிரதேசம் , பஞ்சாப் , ஜார்கண்ட் போன்ற இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வாஜ்பாயின் மறைவையொட்டி நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...