Friday, April 19, 2024

வங்கியில் பணம் எடுக்க அனுமதிக்காததை கண்டித்து மதுக்கூரில் சாலை மறியல் !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் இன்று தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வங்கியில் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

மதுக்கூர் இந்தியன் வங்கியில் நடைபெற்ற இப்போராட்டத்தில், பெண்கள் அதிகளவில் கூடியதால் வங்கி நிர்வாகம் வங்கியை இழுத்து மூடியது. ஆனால் பொதுமக்கள், மாலை 4 மணி வரை பணம் எடுக்க காத்திருந்தனர். இருந்தும் வங்கி நிர்வாகம் வங்கியை திறக்காததால் ஆத்திரமடைந்த மக்கள் வங்கி எதிரேயே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கும்பகோணத்திலிருந்து இந்தியன் வங்கியின் உயர் அதிகாரிகள், காவல்துறையினர், மற்றும் துணை ஆட்சியர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து நீண்ட இழுபரிக்கு பிறகு இப்போராட்டம் முடிவுக்கு வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...