Friday, April 19, 2024

லஞ்சம் வாங்குவதற்கே நேரம் இல்லையாம்… இதுல மக்கள் பணி எங்கே ? அதிரை பேரூராட்சியின் அவலம்…!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் அரசின் தடை உத்தரவை மீறி பிளாஸ்டிக் பைகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வெறும் கண்துடைப்புக்காக மாதம் ஒருமுறையோ, வாரம் ஒருமுறையோ ஆய்வு என்கிற பெயரில் சிறு வியாபாரிகளிடம் தொடர்ந்து அபராதம் வசூலிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இது ஒருபுறமிருக்க, பிளாஸ்டிக் பயன்பாட்டிற்காக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டு சரிகட்டப்படுவதாகவும் பரவலாக கூறப்படுகிறது.

அதிரையில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவது குறித்து அதிரை பேரூராட்சி நிர்வாகத்திற்கும், அதிகாரிகளுக்கும் ஏற்கனவே பலமுறை ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பேரூராட்சியும், அதன் அதிகாரிகளும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே அமைதி காக்கின்றனர்.

பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து பலமுறை ஆதாரத்துடன் பேரூராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு அதிரை எக்ஸ்பிரஸ் தெரியப்படுத்திவிட்டது. ஆனாலும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலை தொடருமாயின், அதிரை பேரூராட்சியின் மெத்தனப்போக்கு குறித்து மேலதிகாரிகளின் கவனத்திற்கு ஆதாரத்துடன் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவித்துக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...