அதிரையில் கடந்த சில மாதங்களாகவே இண்டேன் கேஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் ஊழியர்களுக்கும் அதிரை பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதங்களும் சண்டைகளும் அதிகமாகி வருகிறது.
இண்டேன் கேஸ் நிறுவனம் தங்களுக்கு கேஸ் சிலிண்டர் டெலிவரிக்கான தொகையினை தருவதில்லை எனக் கூறி ஊழியர்கள் பொதுமக்களிடம் வலுக்கட்டாயமாக அந்த தொகையை தங்களுக்கு செலுத்த வேண்டும் என்றும் இல்லையெனில் அடுத்த முறை கேஸ் வினியோகம் செய்ய மாட்டோம் என அச்சுறுத்தி வருகின்றனர்.
இதனால் கேஸ் ஊழியர்களுக்கும் அதிரை இளைஞர்களுக்கும் மத்தியில் மோதல்கள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இம் மோதல் பெரிதாக உருவெடுக்கும் முன் அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் தலையிட்டு உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிரையர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த வேண்டுகோளை செவியேற்று சம்சுல் இஸ்லாம் சங்கம் அதிரை மக்களுக்கு தீர்வைத் தேடித்தருமா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.