Thursday, March 28, 2024

மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணி நீக்கம்!

Share post:

Date:

- Advertisement -

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் தீவிர நடைபெற்றுவருகிறது. நாடு தழுவிய அளவில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பிரதமர் மோடி, கடந்த செவ்வாய்கிழமை ஒடிசா மாநிலம் சம்பால்பூரில் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

அதற்காக, மோடி, ஹெலிகாப்டரில் சம்பால்பூர் சென்று இறங்கியதும், அவரது ஹெலிகாப்டரை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த விவகாரம் பரப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து, மோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்ய உத்தரவிட்ட தேர்தல் அதிகாரியிடம், தேர்தல் ஆணையம் அனுப்பிய ஒரு நபர் அமைப்பு விசாரணை நடத்தியது.

ஒரு நபர் அமைப்பு விசாரணைக்குப் பிறகு, மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை செய்ய உத்தரவிட்ட அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘கர்நாடகாவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி முகமது மோஹசின் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி செயல்படவில்லை. சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்புள்ள வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதனை மீறி சோதனை நடத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஒடிசாவில், அம்மாநில முதல்வர் நவின் பட்நாயக் மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரது ஹெலிகாப்டரிலும் சோதனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...