Friday, April 19, 2024

முஸ்லீம்களை தொடர்ந்து புறக்கணிக்கும் திமுக ?

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 18ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. தமிழகத்தை பொறுத்த வரை இருக்கின்ற 6 இடங்களில் திமுகவுக்கு 3 இடங்களும், அதிமுகவுக்கு 3 இடங்களும் கிடைக்கும்.

இந்நிலையில் திமுக கூட்டணியில் கடந்த லோக்சபா தேர்தல் ஒப்பந்தப்படி மதிமுகவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதம் இரண்டு இடங்களில் திமுக வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், மூத்த வழக்கறிஞர் சண்முகம் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக சார்பில் ஒரு இஸ்லாமியர் கூட வேட்பாளராக நிறுத்தப்படவில்லை என்று விமர்சனம் எழுப்பப்பட்டது. ஆகையால் ராஜ்யசபா இடத்திலாவது திமுக ஒரு இஸ்லாமியரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கையும் எழுப்பப்பட்டது. ஆனால் அதனை திமுக கண்டுகொள்ளவில்லை என்பது வேட்பாளர் அறிவிப்பின் மூலம் தெரிகிறது.

கடந்த லோக்சபா தேர்தலின் போது தமிழக இஸ்லாமியர்களின் வாக்குகளை அப்படியே மொத்தமாக அள்ளிய திமுக, இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பாளிக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வருவது தமிழக இஸ்லாமியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியர்களை திமுக வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்திகொள்ள பார்க்கிறதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...