Thursday, March 28, 2024

மிரட்டிய நாகூர் : வெளியேறிய வேலங்குடி!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை SSMG நினைவாக 19 ம் ஆண்டு மற்றும் அதிரை இளைஞர்கள் கால்பந்து கழகம் 25 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்துத் தொடர் போட்டி அதிரை கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இன்றைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி 18 வது நாளான இன்று முதல் போட்டியில் அதிரை SSMG – Udhayam FC புதுக்கோட்டை அணிகள் மோதின.

அடுத்த சுற்று செல்வதற்கு இரு அணிகளும் கடுமையாய் உழைத்தாலும் அதிரை SSMG அணி 1 – 0 என்கிற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் கௌதியா 7’s நாகூர் – Blues வேலங்குடி அணிகள் களம் கண்டன.

ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் முதல் கோலை தங்கள் வசமாக்க வரிந்து கட்டிக் கொண்டு விளையாடினர்.

இருப்பினும் தனது அருமையான ஆட்டத் திறனால் நாகூர் அணி எதிரணியின் யுக்திகளுக்கு முட்டுக்கட்டை போட்டது.

இறுதியாக 1 – 1 என்கிற கோல் கணக்கில் சம நிலையில் ஆட்டம் முடிவுற்றதால் ‘டை – பிரேக்கர்‘ முறை கடைபிடிக்கப்பட்டது.

இதில் நாகூர் அணி 7 – 6 என்கிற கோல் கணக்கில் வேலங்குடி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றதோடு காலிறுதி சுற்றுக்கும் தகுதி பெற்றது.

நாளைய தினம் கலைவாணர் 7’s கண்டனூர் – உதயம் FC திருச்சி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...