தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் திமுக சார்பாக மௌன ஊர்வலம் நடைபெற்றது.
திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுகவினர் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக மல்லிப்பட்டினம் திமுகவினர் சார்பாக கடைத்தெருவில் இருந்து மனோரா வரை மௌன ஊர்வலம் நடைபெற்றது.இறுதியாக பேருந்து நிலையத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவட்ட மீனவர்அணி அமைப்பாளர் VMR.ராபிக்
தம்ழ் மாநில மீனவ பேரவை செயலாளர் AK.தாஜூதீன்,முன்னாள் மாவட்ட மீனவர்அணி அமைப்பாளர் MKM.அபுதாஹீர், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் MKS ஹபீப் முகமது, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீரையன், திமுக தொண்டரனி,இளைஞர் அணி மற்றும் மீனவர் அணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு மௌன அஞ்சலி செலுத்தினர்.