தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் கிராம சபா கூட்டத்தில் ராஜிவ் காந்தி பஞ்சாயத் ராஜ் சங்கதன் அமைப்பின் வட்டார ஒருங்கிணைப்பாளர் அ.நூருல் அமீன் தலைமையில் மனு அளித்தனர்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மல்லிப்பட்டினம் கிராம பஞ்சாயத் சார்பாக கிராம சபா கூட்டம் நேற்று(2.10.2018) காலை 10 மணியளவில் தனி அலுவலர் தெட்சினா மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிலவும் பிரச்சனைகள்,குடிநீர் தட்டுப்பாடு,முறைகேடான தண்ணீர் குழாய் இணைப்பு,தெரு மின்விளக்கு எரியாமல் இருப்பது,மருத்துவமனை அமைத்தல்,சிறுவர் பூங்கா அமைத்தல் மற்றும் மீனவர்களின் வாழ்வாதரத்தை பாதித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து 13 கோரிக்கைகள் ஊராட்சி தனி அலுவலரிடம் ராஜிவ் காந்தி பஞ்சாய் ராஜ் சங்கதன் வட்டார ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் மனு கொடுத்தார்.