தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் விசைபடகு மீனவர் சங்க நிர்வாகிகள் முதல்வர்,துணை முதல்வருடன் சந்திப்பு.
கஜா புயலால் கடலோர பகுதியான மல்லிப்பட்டிணம் சிதைந்து சின்னாபின்னமாய் போனது.இதில் வாழ்வாதாரமான விசைப்படகுகள்,நாட்டுப்படகுகள் சுக்கு நூறாய் போனது.இவற்றிற்கு அரசு குறிப்பிட்ட நிவாரண தொகை அறிவித்திருந்தது.
அரசு அறிவித்த நிவாரணம் தங்களுக்கு போதாது என்று விசைப்படகு மீனவர் சங்கத்தினர் தொடர்ந்து கூறிவந்தனர்.இந்நிலையில் நிவாரணத்தை உயர்த்தக் கோரி பல கட்டங்களாக ஒவ்வொரு அதிகாரியையும் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக சென்னையில் முகாமிட்டு மல்லிப்பட்டிணம் மீனவ சங்க நிர்வாகிகள் முதல்வர்,துணை முதல்வருடன் சந்தித்து நிவாரணத்தை உயர்த்திட கோரிக்கை வைத்தனர்.
இச்சந்திப்பை முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் ஏற்பாடு செய்திருந்தனர்,தமிழ்நாடு மீனவ பேரவை மாநில செயலாளர் AK.தாஜிதீன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்தனர்.