தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் துறைமுக கட்டுமான பணிகள் மீனவ சங்கங்களின் போராட்டத்தால் நிறுத்தப்பட்டன.
மல்லிப்பட்டிணம் மீன் பிடி துறைமுகம் அமைக்க 80 கோடி நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட படகுகளுக்கு உரிய நிவாரண தொகைகள் வழங்கபடாத நிலையில் அண்மையில் கூடிய மாவட்ட மீனவர் சங்கத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி துறைமுக கட்டுமான பணி நிறுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில் இன்று(பிப் 23) துறைமுக அதிகாரிகள் தமிழ்நாடு மீனவ பேரவை செயலாளர் AK.தாஜுதீன், மீனவ சங்க பொருளாளர் இப்ராகீம்,AS.சர்புதீன்,நாட்டுபடகு சங்க பொருளாளர் SRK.ராபீக் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ஆகையால் கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.