தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டிணத்தில் புதியதாக அமைக்கப்பட்ட சாலையில் பள்ளம்,விரசல்.
பல ஆண்டு இழுபறிக்கு பின் ஈசிஆர் சாலையில் இருந்து முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் வழியாக துறைமுகம் வரை புதியதாக 14.49 லட்சம் செலவில் தார்சாலையை பலப்படுத்துதல் என்று வேலைகள் நடைபெற்றன.
இந்நிலையில் சாலை அமைக்கப்பட்டு பத்து நாட்கள் கூட ஆகாத நிலையில் ஆங்காங்கே பெரும் பள்ளங்களும்,குழிகளும் ஏற்பட்டு மிகவும் தரமற்ற சாலையாக இந்த சாலை அமைந்து இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும் இச்சாலை பிரதான சாலைநாகும்.இதன் வழியாக துறைமுகம் செல்லும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன,அப்படியிருக்கையில் தரமற்ற சாலையை அமைத்து அவதிக்குள்ளாக்குவதாக வாகன ஓட்டிகள் வேதனையை தெரிவித்தனர்.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதனை ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்பது பொதுமக்களின் எண்ணமாக இருக்கிறது.