தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் மதுபாட்டில்களின் கிடங்காக காட்சி தருகிறது.
மல்லிப்பட்டிணத்தில் ₹60 கோடி செலவில் புதியதாக துறைமுகம் கட்டப்பட்டு கடந்த மாதம் முதலமைச்சர் காணொலி காட்சி மூலமாக திறந்துவைத்தார்.இந்த துறைமுகம் இப்பகுதி மக்களால் மிகுந்த வரவேற்பை பெற்றது.துறைமுகத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து புகைப்படங்களை எடுத்து செல்கின்றனர்.
இந்நிலையில் இரவு நேரங்களில் மது பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கி கொண்டு துறைமுகத்தில் உள்ள கட்டிடங்களில் மதுவை அருந்திவிட்டு பாட்டில்கள்,பிளாஸ்டிக் கப்கள் போன்றவற்றை அங்கேயே போட்டுவிட்டு மது அருந்தும் கூடங்களாக மாற்றி வருகின்றனர்.இதனால் துறைமுகம் அதன் பொழிவை இழந்து வருகிறது.
மேலும் துறைமுக பகுதியில் மது அருந்துபவர்களை தடுத்திடவும்,பாதுகாப்பை வலுப்படுத்திட வேண்டும்,துறைமுக காவலர்கள் இரவு நேரங்களில் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என்பது இப்பகுதி சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.