மதுக்கூர் வாடியக்காடு பகுதியில் 110 KV கொண்ட துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மதுக்கூர், துவரங்குறிச்சி, அதிராம்பட்டினம் உள்ளிட்ட ஊர்கள் மின்சாரம் பெறுகின்றன.
இந்நிலையில் இன்று(15/04/2019) இரவு 8 மணியளவில் திடீரென துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வேகமாக பரவிய தீ கொழுந்துவிட்டு எரிவதால், அதனை அணைக்க தீயணைப்பு படையினர் போராடிக்கொண்டிருக்கின்றனர்.
இதனால் இத்துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெரும் மதுக்கூர், துவரங்குறிச்சி, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 மணி நேரத்திற்கும் மேலாக மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், மீண்டும் மின் விநியோகம் எப்போது வழங்கப்படும் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை.
ஆனால் இந்த மின்தடையை பயன்படுத்தி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.