தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் கிளையின் சார்பில் 7.9.2019 அன்று இரத்த தானம் மற்றும் இரத்த வகை கண்டறிதல் மற்றும் இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி தஞ்சை தெற்கு மாவட்ட மருத்துவரணிச் செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் தலைமையில் மாவட்டச் செயலாளர் வல்லம் பாட்ஷா, மற்றும் கிளை தலைவர் TMA அபூபக்கர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுக்கூர் கிளை செயலாளர் ரஹ்மதுல்லாஹ்,அப்துல் கரீம்,J.Hஆசிப் அலி ஏற்பாடு செய்தனர்
சிறப்பு அழைப்பாளராக காவல் துணை ஆய்வாளரா திரு. ஸ்ரீ தர் பங்குகொண்டார் மேலும் சமூக ஆர்வலர்களும் இரத்ததான கொடையாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
மேற்படி இரத்ததான முகாமில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர் இதில் 61 யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது இதனை தஞ்சை காளி இரத்த வங்கி மருத்துவ அதிகாரி Dr.I. சன்முக சுந்தரம் பெற்றுக்கொண்டார்.