Thursday, March 28, 2024

பேராவூரணியில் குளத்தை சொந்த முயற்சியில் தூர் வாரிய இளைஞர்கள்!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் ஆவணம் பெரியநாயகிபுரம் சின்னக்குளத்தை தங்களது சொந்த முயற்சியில் தூர் வாரும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆவணம் பெரியநாயகிபுரம் சின்னக்குளம் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தூர் வாரப்படாமல், பாசி படர்ந்தும், சேறும், சகதியுமாக இருந்தது. இதனால் கடும் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதனால் இப்பகுதி சுகாதாரம் பாதிக்கப்பட்டு, கொசுக்கடி பிரச்சினையும் தலைதூக்கத் தொடங்கியது.

இக்குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்தி தண்ணீர் நிரப்பித் தருமாறு இப்பகுதி இளைஞர்கள் ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் பல்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் தீர்வு காணப்படவில்லை. இதையடுத்து குளத்தை தாங்களாகவே தூர்வாரி சுத்தம் செய்ய முடிவெடுத்தனர்.

இதையடுத்து இளைஞர்களின் தலைமையில் முக்கியப் பிரமுகர்கள், கிராமத்தினரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் என்.அசோக்குமார் உள்ளிட்ட பலர் நிதியுதவி அளித்தனர்.

இந்த நிதியுதவித் தொகை மற்றும் கிராமத்தினர் பங்களிப்புடன் சின்னக்குளத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் தூர் வாரும் பணி கடந்த 9 தினங்களாக நடைபெற்று வருகிறது. இளைஞர்களின் இந்த செயலுக்கு இப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...