Wednesday, April 24, 2024

பெரியார் பற்றி கருத்து சொல்லும்போது படிக்க வேண்டும் ரஜினிக்கு துணை முதல்வர் மறைமுக அறிவுரை…!

Share post:

Date:

- Advertisement -

பெரியாரை குறை சொல்பவர்கள், தீவிரமாக படித்து ஆராய்ந்த பின்னர் கருத்து சொல்ல வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார்.

தென் இந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற புத்தக கண்காட்சியின் நிறைவு விழா சென்னை நந்தனத்தில் உள்ள  ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் துனை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம்,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர், தந்தை பெரியாரின் உழைப்பால் தான் தன்னை போன்ற சாதாரண  மனிதர்கள் மிக உயர்ந்த இடத்திற்கு வர காரணம் என புகழாரம் சூட்டினார்.

பெரியாருக்கு எதிராக வந்த விமர்சனங்கள் எல்லாம் பொய்யாகிவிட்டதாகக் கூறிய ஓ.பன்னீர்செல்வம், பெரியாரை குறை சொல்பவர்கள், சமூக வளர்ச்சிக்காக அவர் எடுத்த முன்முயற்சிகளை தீவிரமாக படித்து ஆராய்ந்த பின்னர் கருத்து சொல்ல வேண்டும் என தெரிவித்தார். 
இளம் எழுத்தாளர்கள் தங்கள் சிந்தனைகளைக் கொண்டு மக்கள் நலனுக்காக செயல்படுவதை எந்த சூழ்நிலையிலும் நிறுத்தக்கூடாது எனவும் துணை முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...