தஞ்சை மாவட்டம் புதுப்பட்டிணம் ஊராட்சியில் சேதம் அடைந்த குடிநீர் குழாய்கள் மற்றும் வெளிவயல் கிராமத்தின் முருகன் கோவில் அருகில் சில சமுக விரோதிகளால் அடிக்கடி குடிநீர் குழாய்கள் சேதமாக்கப்படுகிறது.
ஆகவே அந்த இடத்தில் பிளாஸ்டிக் குழாய்களுக்கு பதிலாக இரும்பு குழாய்கள் அமைக்கும் பணி வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவின் படி நேற்று போர்கால அடிப்படையில் துவங்கி நடைபெற்று வருகிறது.
சில சமுகவிரோதிகளின் இந்த செயல்களால் அப்பகுதிக்கு சீரான குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. வட்டார வளர்ச்சி ஆய்வாளரின் உத்தரவு படி இப்பணி நடைபெற்றது.
இனிவரும் காலங்களில் தண்ணீர் சீராக வரும் எனவும் இனி இது போல் நடக்காமல் ஊர் மக்களே அந்த சில சமுக விரோதிகளை கண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.