நான் தனிமரம் கிடையாது ; கூட்டணிக்கும் விரும்பவில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் இன்று காலை மதுரையில் பேட்டி அளித்தார். அப்போது நான் தனிமரம் கிடையாது என்றும், கூட்டணிக்கு விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் புதிதாக வரும் கட்சிகளின் ஆதரவை மட்டுமே ஏற்போம் என்றும், அவர்களுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.