Saturday, April 20, 2024

பாபர் மசூதி இடிப்பை கண்டித்து தஞ்சையில் தமுமுக ஆர்பாட்டம்!!

Share post:

Date:

- Advertisement -

தமுமுக தஞ்சை மாநகர தெற்கு மற்றும் வடக்கு சார்பாக இன்று தஞ்சை ரயில் நிலையம் அருகாமையில் பாபர் மசூதியை இடித்த கயவர்களை கண்டித்து பயங்கரவாத எதிர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு தஞ்சை தெற்கு மமக மாவட்ட தலைவர் S.அஹமது ஹாஜா தலைமையேற்று, M.ஜஃபருல்லாஹ், Er.A. முஹம்மது இலியாஸ், G.முஹம்மது செல்லப்பா,M.முஹம்மது சலீம் புலவர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகிக்க மாவட்ட செயலர் A.ஷேக் மைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து விசிக கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், மமக அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் சரவண பாண்டியன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்ற இறுதியாக தலைமைக் கழக பேச்சாளர் கோவை.ஜெய்னுலாப்தீன் கண்டன உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, எதிர்வரும் ஆண்டிற்குள் இஸ்லாமியர்களிடம் பாபர் மசூதியை ஒப்படைக்காவிடில் அடுத்த டிசம்பர் 5 ம் நாள் தமுமுகவின் தலைமை கட்டளையிட்டால் அயோத்தி சென்று தடையை உடைத்து பாபர் மசூதியை கட்டுவோம் என்றார். இறுதியாக தஞ்சை ரியாஸ் அஹமது நன்றியுரை கூறினார். இந்த ஆர்பட்டத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாக கலந்துக் கொண்டது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...