இந்தியாவில் பாஜக அரசு அமல்படுத்தியுள்ள CAA, NRC, NPR ஆகிய சட்டம் ஈழ அகதிகள், இஸ்லாமியர்களை கடுமையாக பாதிக்கும் சட்டமாக உள்ளது.
இதனால் நாடெங்கிலும் இஸ்லாமியர்கள், ஈழ ஆதரவாளர்கள், நடு நிலையாளர்கள் போராட்ட களங்களை அமைத்து இச்சட்டத்தை எதிர்த்து வருகிறார்கள்.
இந்தியா மட்டுமல்லாது உலகெங்கும் வியாப்பித்துள்ள இந்தியர்கள் அந்தந்த நாடுகளில் போரட்டத்தை கட்டமைத்து குரல் கொடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் லண்டன் மாநகரில் உள்ள இந்திய தூதரக நுழைவு வாயில் எதிரில் குழுமியவர்கள் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களுக்கு எதிராகவும், மத்திய பாஜக அரசை கண்டித்தும் முழக்கமிட்டனர்.
நான்காயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களில் ஏராளமான அதிரையர்களும் கையில் NRC, NPR, CAAவுக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தியபடி கலந்து கொண்டனர்.