நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நடைபெற்று வந்த ஷாஹீன் பாக் போராட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுதாக தமிழக அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை போன்ற ஊர்களில் நடைபெற்று வந்த ஷாஹீன் பாக் தொடர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிரையை அடுத்த பட்டுக்கோட்டையில் நடைபெற்று வரும் ஷாஹீன் பாக் போராட்டம் தொடர்ந்து நடைபெறுமா ? அல்லது ஒத்திவைக்கப்படுமா ? என்பது நாளை ஆலோசனை செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.