தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைக்கும் பண்ணவயலுக்கும் இடையே உள்ள அரிசி ஆலையில் இருந்து வரும் துகள்களால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
பட்டுக்கோட்டை அருகே சிவக்கொல்லை பேருந்து நிலையத்திருக்கும்,நைனாங்குளம் பேருந்து நிலையத்திற்கும் இடையே அரிசி அரைவை மில் இயங்கி வருகிறது.இந்த மில்லில் அரைக்கப்படும் பொருட்களில் இருந்து வெளியேறும் துகள்கள் வாகன ஓட்டிகளுக்கு குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது, மேலும் இதன் மூலம் விபத்துகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.
ஆகவே உடனடியாக ஆலை நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து தூசுகள் வெளியேறா வண்ணம் பாதுகாக்க வேண்டும் என்பது அப்பகுதி வழியே செல்லும் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக இருக்கிறது.