உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் விண்வெளி கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியினை ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான சதீஷ் தவான் விண்வெளி மையம் (SDSC) SHAR நடத்துகின்றது. இந்நிகழ்ச்சிகள் 3 நாட்கள் நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று செவ்வாய்கிழமை விண்வெளி விழுப்புணர்வு பேரணி பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். செந்தில்குமார் மற்றும் பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இப்பேரணியில் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி, மனோரா பாலிடெக்னிக் கல்லூரி, டாக்டர் கலாம் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். இப்பேரணியானது பட்டுக்கோட்டை சாமியார்மடம் அண்ணாசிலையில் தொடங்கி பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது.