Friday, March 29, 2024

பட்டுக்கோட்டையில் குளத்தில் மூழ்கிய மூதாட்டியை காப்பாற்றிய தொண்டு அமைப்பினர் !

Share post:

Date:

- Advertisement -

பட்டுக்கோட்டையில் குளத்தில் மயங்கி விழுந்த ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பட்டுக்கோட்டை காசாங்குளத்தில் நேற்று செவ்வாய்கிழமை ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் மயக்கமடைந்து குளத்தில் விழுந்தார். அவருடைய பெயர் செல்லக்கண்ணு(வயது 68). குளத்தில் மயங்கி விழுந்த அவர் சுமார் அரைமணி நேரம் குளத்திலேயே மிதந்துள்ளார்.

இந்நிலையில் அங்கு இருந்த மக்கள் அளித்த தகவலின் பேரில் விதைகள் அமைப்பினரும், கலாம் நண்பர்கள் இயக்கத்தினரும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். உடனே அவர்கள் பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே தீயணைப்பு துறையினரின் ஒத்துழைப்புடன் அந்த மூதாட்டியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அம்மூதாட்டி அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிர் காக்கும் சேவையில் விரைந்து செயல்பட்டு மூதாட்டி ஒருவரின் உயிரை காப்பாற்றிய விதைகள் அமைப்பினரையும், கலாம் நண்பர்கள் இயக்கத்தினரையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...