Thursday, March 28, 2024

மத்திய அரசை கண்டித்து நாடு முழுதும் நாளை பந்த் !!

Share post:

Date:

- Advertisement -

பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக நாளை நடக்கும் போராட்டம் காரணமாக தமிழகத்தில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும். இதற்கு அதிமுக, பாஜக தவிர்த்து பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது. இதனால் மக்கள் கடும் கஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இந்த நிலையில் இதற்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் இந்தியா முழுக்க முழு அடைப்பு போரட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்கு மக்களும் ஆதரவு தெரிவிக்கும் நிலையில் இருக்கிறார்கள்.

தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.86காசுகளாகும். டீசல் விலை 56 காசுகள் அதிகரித்துள்ளது. தற்போதைய டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.88காசுகளாகும். மும்பையில் பெட்ரோல் விலை 88.50 ரூபாய்க்கு விற்கிறது.

காங்கிரஸ் அழைப்பு விடுத்திருக்கும் போராட்டத்திற்கு தி.மு.க., ம.தி.மு.க., இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ, விடுதலை சிறுத்தை, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தி.க, பெருந்தலைவர் மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக், எஸ்.டி.டி.பி.ஐ. ஆகிய கட்சிகள் ஆதரவு தருகிறது. பாமக வெளியில் இருந்து ஆதரிக்கிறது.

இதனால் தமிழ்நாட்டில் நாளை அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கும். வணிகர் அமைப்புகள் அனைத்தும் கடைகளை அடைப்பதாக கூறியுள்ளது. அதே சமயத்தில் தொழிலாளர்கள் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...